கோலாலம்பூர் : ஆகஸ்ட் 10 முதல் புக்கிட் அமான் வணிக குற்ற புலனாய்வுத் துறை (சிசிஐடி) இயக்குநராக டத்தோ ஜைனுதீன் யாகோப் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 28 அன்று கட்டாயமாக ஓய்வு பெற்ற டத்தோஶ்ரீ முகமட் ஜகாரியா அகமதுவுக்கு பதிலாக ஜைனுதீன் நியமிக்கப்படுவார்.
தேசிய போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் முன்னிலையில் மூத்த அதிகாரிகளின் ஏற்பாட்டில் கடமைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புக்கிட் அமானில் நடைபெற்றது. ஜைனுதீன் முன்பு கெடா காவல்துறைத் தலைவராக இருந்தார். மேலும் கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். – பெர்னாமா