Home இந்தியா செப்டம்பர் 1-ந்தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மம்தா பானர்ஜி

செப்டம்பர் 1-ந்தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர் முன்களப் பணியாளர்களாக திகழ்கிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் பாத்துக்கொள்வதும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு அளிப்பதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எல்லோரையும் சந்திக்கும் நி்லை ஏற்பட்டுள்ள போலீசார், கொரோனா தாக்குதலுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செப்டம்பர் 1-ந்தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்பட்டும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version