Home இந்தியா தரைப்பாலம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்

தரைப்பாலம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகள் நிரம்பி வருவதால் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாலங்கள், சாலைகளின் தரைவழி பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சண்டேலா கிராமத்தில் தரைவழிப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் வந்த கார் ஒன்று தரைவழிப்பாலத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது அங்கிருந்த மக்கள் தண்ணீர் அதிகமாக செல்கிறது. பாலம் வழியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

காரில் இருந்த இருவரும் போதையில் இருந்ததால் அவர்கள் சொன்னதை கேட்கவில்லை. அவர்கள் பாலத்தை தடக்க முயற்சி செய்யும்போது வெள்ளத்தில் கார் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்களையும், காரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version