Home இந்தியா 7,11,12-ந் தேதிகளில் விமான சேவைக்கு தடை

7,11,12-ந் தேதிகளில் விமான சேவைக்கு தடை

கொரோனா வைரஸ் தொற்றால் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மே 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்காள மாநிலம் டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமான மேற்கு வங்காளம் வர தடைவிதித்திருந்தது.
மேற்கு வங்காள மாநிலம் அடிக்கடி முழு ஊரடங்கை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் 7-ந்தேதி, 11-ந்தேதி மற்றும் 12-ந்தேதிகளில் மேற்கு வங்காளத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் விமான போக்குவரத்து சேவை முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.
அதேபோல் அந்த ஆறு நகரங்களில் இருந்து விமானங்கள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாரத்திற்கு மூன்று நாட்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்று மேற்கு வங்காள அரசு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version