சீரியல் நாயகி ஆல்யா மானசா சிறிய இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்க உள்ள புதிய சீரியலின் பிரமோ ஷூட் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார். இன்ஸ்டாவில் அவர் புகைப்படத்துடன் சீரியலின் பெயரை கெஸ் செய்ய சொல்லி பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்தார். இருவருக்கும் சீரியலில் நடிக்கும் போதே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அந்த சீரியல் முடிந்ததும் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் கமிட் ஆகிவிட்டார். ஆனால் ஆல்யா மானசா சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். அப்போது தான் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஆல்யா – சஞ்சீவ் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். ஆல்யாவும் தனது உடல் எடையை முழுவதும் குறைத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல தான் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சீரியலை ராஜா ராணி சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். ஆல்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ள ஆல்யா, புதிய சீரியலின் பிரமோ ஷூட் நடந்தது குறித்து பதிவிட்டு, ஷூட்டிங் நடைபெற்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இதுவரை 45 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் சீரியலில் களமிறங்கும் ஆல்யாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.