Home சினிமா 5 ஆண்டுகளுக்கு பிறகு…

5 ஆண்டுகளுக்கு பிறகு…

பிரேமம் என்ற மெகா ஹிட் மலையாள படத்தை கொடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நேரம் படம் மூலம் தமிழ், மலையாளத்தில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். அதனைத் தொடர்ந்து இவர் மலையாளத்தில் எடுத்த பிரேமம் பயங்கர ஹிட். அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடியது பிரேமம்.

குறிப்பாக பிரேமம் படத்தில் அறிமுகமான சாய் பல்லவி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார். மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அல்போன்ஸ் புத்ரனின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக பாட்டு என்ற படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். யு.ஜி.எம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் அல்போன்ஸ் புத்ரன் இசையமைப்பாளராகவும் அவராதம் எடுத்துள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleமலேசியர்களில் அலட்சியம் நீடிக்கிறது
Next articleதனியார் மருத்துவமனை ஊழியர்களுக்குத்தொற்று

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version