Home மலேசியா மாக்காவ் கும்பல் சிக்கியது

மாக்காவ் கும்பல் சிக்கியது

மக்காவ் ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மொத்தம் 43 பேர் குளுவாங் மாவட்டத்தில் உள்ள  ஒரு ஹோட்டலில் நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிட்சை, இந்த சோதனையின் போது, ​​39 சீன தேச ஆண்கள், இரண்டு உள்ளூர்ப் பெண்களை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தார்.

இல்லாத அந்நிய செலாவணி முதலீடுகளை மேற்கொள்வதாக நம்பப்படும் சிண்டிகேட், கோலாலம்பூர், ஜோகூர்பாரு ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

இந்த சிண்டிகேட்டின் இயக்க நேரம் உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும், மேலும் அவை சீன நாட்டினரை குறிவைத்திருக்கின்றன.

இந்த சோதனையில், 35 மடிக்கணினிகளையும், பல்வேறு பிராண்டுகளின் 593 யூனிட் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 , குடிநுழைவு சட்டம் 1959 இன் பிரிவு 6 (1) (சி) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், அயோப் கான், சிண்டிகேட்டின் மீதமுள்ள உறுப்பினர்கள்  சூத்திரதாரிகளைத் தொடர்ந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருப்பதைக் கூறினார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த நபர்களுடன் பழக வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது  என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version