Home மலேசியா கே.எல் மருத்துவமனை கடைப்பகுதியில் தீ

கே.எல் மருத்துவமனை கடைப்பகுதியில் தீ

கோலாலம்பூர் மருத்துவமனையின் (எச்.கே.எல்) நான்காவது மாடியில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் இரவு தீ பரவியது. இதனால் பல நோயாளிகள் வெளியேற்றுவது  கட்டாயமானது.

கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் மூத்த செயல்முறை அதிகாரி ஹம்ஸா மொகமட் ஈசா கூறுகையில், இரவு 11.07 மணிக்கு ஒரு அழைப்பு வந்ததாகக் கூறினார். அதைத் தொடர்ந்து தித்திவங்சா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடை வளாகம் சுமார் 10 விழுக்காடு  சேதமடைந்திருந்தது. எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரவு 11.35 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சம்பவ இடத்திலுள்ள சோதனைகளில் பல நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அதிகாலை 1.10 மணியளவில் அவர்கள் அந்தந்த வார்டுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

Previous articleஉல்லாச பயணம் சோகத்தில் முடிந்தது
Next article754 கால்நடை மருத்துவர்களுக்கான பணி…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version