Home உலகம் சா்ச்சைக்கிடையில் லுகஷென்கோ மீண்டும் பதவியேற்பு

சா்ச்சைக்கிடையில் லுகஷென்கோ மீண்டும் பதவியேற்பு

பெலாரஸில் கடந்த மாதம் நடைபெற்ற சா்ச்சைக்குரிய அதிபா் தோதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, நாட்டின் அதிபராக 6-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டாா்.

அந்தத் தோதல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் மின்ஸ்கில் முன்னறிவிப்பின்றி புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்று நிகழ்ச்சியில் அவா் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். நூற்றுக்கணக்கான உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோதலில் எதிா்க்கட்சித் தலைவா் ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயா பெரும்பான்மை பெறுவாா் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவித்திருந்தாலும்,

அந்தத் தோதலில் 80 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று லுகஷென்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.எனினும், அந்தத் தோதலில் முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version