Home மலேசியா சிறுவனை ஒப்படைக்க பெற்றோரை தேடுகின்றனர் போலீசார்

சிறுவனை ஒப்படைக்க பெற்றோரை தேடுகின்றனர் போலீசார்

காஜாங்: புதன்கிழமை (செப்டம்பர் 23) இங்குள்ள  தாமான்  ஜுவாரா ஜெயாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுமார் இரண்டு முதல் மூன்று வயதுடையவர் என்று நம்பப்படும் சிறுவன் சிவப்பு சட்டை, வெள்ளை பேன்ட் மற்றும் செருப்பு அணிந்திருந்தார்.

புதன்கிழமை காலை 9.40 மணியளவில் சிறுவன் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே படுத்துக் கொண்டிருந்ததாக கஜாங் ஓ.சி.பி.டி உதவி ஆணையர் முமகட் ஜைத் ஹாசன் தெரிவித்தார். நாங்கள் சிறுவனைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பெறவில்லை.

வியாழக்கிழமை (செப்டம்பர் 24) தொடர்பு கொண்டபோது “அவர் காஜாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்” என்று ஏசிபி ஜைத் கூறினார்.

தகவல் தெரிந்த எவரும் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ஃபைஸ் நோர்ஸாவை 013-2773407 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு ஏ.சி.பி முகமட் ஸைத் கேட்டுக்கொண்டார்.

Previous articleமீண்டும் கே.எஸ். ரவிக்குமாரிடம் ‘ராணா’ திரைப்படத்தின் கதை கேட்ட ரஜினி
Next articleதிரையரங்கு பாணியில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version