Home மலேசியா நகைக் கடையில் கொள்ளை: மூவர் கைது

நகைக் கடையில் கொள்ளை: மூவர் கைது

சிபு: இங்குள்ள ஜலான் மார்க்கெட்டில் உள்ள ஒரு தங்கக் கடைக்குள் நுழைந்து 57,000  ஆயிரம் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சிபு ஒ.சி.பி.டி உதவி ஆணையர் ஸ்டான்லி ஜொனாதன் ரிங்கிட் கூறுகையில், மற்றொரு சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 24 மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரை இந்த திருட்டு நடந்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள்  கூரையிலிருந்து ஒரு துளை  போட்டு கடைக்குள் நுழைந்ததாக நாங்கள் நம்பகிறோம் என்று அவர் கூறினார்.

59 வயதான பொற்கொல்லர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து சந்தேக நபர்களை அதே காலையில் கைது செய்தனர் என்று ஏசிபி ஸ்டான்லி கூறினார்.

சந்தேக நபர்கள் – 33 வயதான பெண், 40 வயதான லோரி டிரைவர் மற்றும் 37 வயதான லோரி உதவியாளர் – ஜலான் வோங் நாய் சியோங்கில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் போதைப்பொருள் அடங்கிய வன்முறைக் குற்றங்களின் முந்தைய பதிவைக் கொண்டுள்ளனர் என்று ஏசிபி ஸ்டான்லி சனிக்கிழமை (செப்டம்பர் 26) கூறினார்.

வீட்டை உடைத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Previous articleஉக்ரைனில் ராணுவ விமானத்தில் ஏற்பட்ட விபத்தில்…
Next articleகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருடன் சச்சின் மகள் காதலா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version