Home சினிமா விசாரணைக்காக ஆஜரான இயக்குநர் அனுராக்

விசாரணைக்காக ஆஜரான இயக்குநர் அனுராக்

இயக்குனர் அனுராக் காஷ்யப்பை இன்று காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இயக்குநர் அனுராக் கஷ்யப் வந்தடைந்தார்.

இயக்குனர் அனுராக் 2014 இல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பயால் கோஷ் குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அனுராக் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மும்பை போலீசார் இன்று காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் இயக்குனர் அனுராக் விசாரிக்க நேற்று சம்மன் அனுப்பினர்.

நீதி கேட்டு பாயல் கோஷ் நேற்றுமுன்தினம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்
Next articleCadangan nyahgazet hutan simpan Kuala Langat Utara dibantah

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version