Home மலேசியா செப்.30இல் கேஎல்ஐஏ 2 இல் இருந்து நீலாய் சென்றவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல்

செப்.30இல் கேஎல்ஐஏ 2 இல் இருந்து நீலாய் சென்றவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல்

சிரம்பான்: செப்டம்பர் 30 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ 2 முதல் நீலாய் சென்ட்ரல் வரை மைபைஸ்சில் ஏறிய பயணிகள் நெகிரி செம்பிலான் சுகாதார அதிகாரிகளுடன் விரைவில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை முகநூல் பதிவில், என்.டி.எச் 2259 பஸ்  விமான நிலையத்தின் பி 10 பிளாட்பாரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து நீலாய் செண்டரலுக்கு வந்து சேர்ந்தது.

பஸ்ஸில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கையையும், அவர்களில் யாராவது கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்ததையும் அந்த பதிவில் குறிப்பிடவில்லை.

இருப்பினும், பயணிகள் திணைக்களத்தின் கோவிட் -19 செயல்பாட்டு அறையை 06-763 4809 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் திறந்திருக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version