Home மலேசியா தற்காலிக குடியிருப்பில் தீ: இருவர் பலி

தற்காலிக குடியிருப்பில் தீ: இருவர் பலி

பொந்தியான்: இங்குள்ள சுங்கை புனியில் உள்ள கம்போங் பாரிட் கிச்சிலில் தற்காலிக குடியிருப்புகள் தீப்பிடித்ததில் இரண்டு பேர் எரித்து உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (அக். 11) பிற்பகல் 2.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை தலைவர் இக்பால் ருடுவான் தெரிவித்தார்.

8.2 மீட்டர் 2.7 மீ தற்காலிக குடியிருப்பு 90 விழுக்காடு எரிந்திருந்ததை நாங்கள் கண்டோம். உள்ளே சிக்கியவர் இருப்பதாக பொதுமக்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

தீ முழுவதுமாக வெளியேற்றப்பட்டதை உறுதிசெய்த பிறகு, நாங்கள் இடிபாடுகளை ஆய்வு செய்தோம். இரண்டு எரிந்த உடல்களைக் கண்டோம் என்று அவர் கூறினார்.

அவர்களில் ஒருவர் மியான்மர் நாட்டவர் என்று நம்பப்பட்ட அவர், எரிந்த உடல் பாகங்களை அடையாளம் காட்ட மற்றும் அடுத்த நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version