Home இந்தியா 3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த அதிகாரி! கான்பூருக்கு பணிமாற்றம்!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த அதிகாரி! கான்பூருக்கு பணிமாற்றம்!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த அதிகாரி பணிமாற்றம்.

உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், கொரோனா பணிகளை மேற்கொள்ள தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், சரியான ஓய்வுக்கு பிறகு பணிக்கு வர வேண்டும் என்றும் அன்பான அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவர் காஷிபாத்தில் இருந்து கான்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிமாற்றம் வழக்கமானது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article80,000 பஸ் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
Next articleCOVID-19: CT Value gelombang ketiga membimbangkan

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version