Home மலேசியா கார் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கார் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஒரு மலாய் பெண்மணி தனது புரோட்டான் ஈஸ்வரா  காரை ஒன் செலாயாங் அருகிலுள்ள சூராவ் முன்பு தனது  நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

போலீஸ் பந்துவான் என்று நம்பப்படும் ஒருவர் காரை கார் இழுத்து சென்றதாக பாதுகாவலர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்பெண்மணி தனது காருக்கான தவணையை கட்டி முடித்து விட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் சம்பவம் நடந்த 15.10.2020 அன்றே புகார் செய்துள்ளார்.

புகார் கிடைத்த அன்றைய தினமே இரவு 11 மணிக்கு செலாயாங் குற்றத் தடுப்பு போலீசார் கார் இழுத்து சென்ற வாகன எண்பட்டையை வைத்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கம்பெனிக்கு சென்றபோது அந்த இழுவை வாகனம் அந்நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கண்டறிந்ததோடு அந்த வண்டியை ஓட்டிய மலேசிய ஆடவரையும் போலீசார் கைது செய்ததோடு அந்த இழுவை லோரியையும் அவர்கள் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மறுநாள் நள்ளிரவு (16.10) 1.20 மணியளவில் கைது செய்யப்பட்ட ஆடவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் பத்துகேவ்ஸ் சுங்கை துவா என்ற இடத்திற்கு சென்று உள்நாட்டு ஆடவரை கைது செய்து காணாமல் போனதாக புகார் செய்த பெண்மணியின் புரோட்டோன் ஈஸ்வரா காரை கைப்பற்றியுள்ளனர்.


அன்று மாலை 6 மணியளவில் கோம்பாக் மாவட்ட போலீசார் அவர்களது வட்டாரத்தை சேர்ந்த மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.  அந்நபரிடம் இருந்து டொயோட்டோ எஸ்டிமா காரை செலாயாங் பாருவில் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வழக்கை செக்‌ஷன் 379a கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் 29 வயது முதல் 42 வயதிலான இரு மலாய் ஆடவர்கள் மற்றும் இரண்டு இந்திய ஆடவர்களை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் பின் தாராவே தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version