Home இந்தியா போதைப்பொருள் விவகாரம்: பிக்பாஸ் நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம்: பிக்பாஸ் நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.

ஏற்கனவே ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்யாணி ஆகிய இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் கனடா நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் கன்னட போட்டியாளரும் நடிகையுமான ஆதம் பாஷா என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சின்னத்திரை நடிகை அனிகா என்பவரிடம் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போதை பொருள் விவகாரத்தில் மேலும் இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version