டிஜிட்டல் மன்றம் உணவு வழங்கல் உத்தரவாதத் திட்டத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு தேசிய உடல் திட்டமிடல் மன்றம் (எம்.பி.எஃப்.என்) கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடீன் யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட், ஜோகூர் மாநில செயலாளர் டத்தோ அஸ்மி ரோஹானி , ஜொகூர் நகர ,நாட்டு திட்டமிடல் துறை இயக்குநர் டத்தோ மொஹமட் ஃபைசால் ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பயன்பாடுகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து வகையான கொள்கைகளையும் ஒருங்கிணைக்க முக்கிய தளமாக இருக்கும் டிஜிட்டல் மன்றம் நிறுவப்படுவதை மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜோகூர் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஏனெனில் இது எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரலாகும். இது மலேசிய தகவல் தொடர்பு, மல்டிமீடியா கமிஷனின் (எம்.சி.எம்.சி) தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு (ஜெண்டெலா) இணங்குகிறது என்று ஜொகூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவு பக்கத்தில் ஓர் இடுகை தெரிவிக்கிறது.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூலோபாய இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, உணவு வழங்கல் உத்தரவாதத் திட்டம் பொருத்தமானது என்றும் அந்த இடுகை குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட மத்திய அரசு அமைச்சகங்கள் ஜொகூருடன் இணைந்து செயல்பட முடியும் என்று மாநில அரசு நம்புகிறது, இதனால் இந்த முயற்சி மிகவும் ஒழுங்காகவும் மென்மையாகவும் வெற்றிபெற முடியும் என்று ஹஸ்னி கூறினார்.