கோலாலம்பூர்: முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ லோக்மன் நூர் ஆடாம் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் மிரட்டலுக்காக லோக்மேன் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 ன் கீழ் கைது செய்யப்பட்டார் என்று அறியப்படுகிறது. லோக்மேன் தனது முகநூல் பக்கத்தில், புக்கிட் அமானால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒரு வழக்கறிஞரை வருமாறு கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் புக்கிட் அமானுக்கு வந்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நசீரை சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
நான் பிரிவு 506 இன் கீழ் வைக்கப்பட்டுள்ளேன் என்று அவர் திங்கள்கிழமை (நவம்பர் 2) நள்ளிரவில் பேஸ்புக்கில் பதிவிட்டார்.
தொடர்பு கொண்டபோது, புக்கிட் அமான் சிஐடியின் துணை இயக்குநர் துணை ஆணையர் மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். சிஐடி இயக்குனர் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்று அவர் கூறினார்.