Home மலேசியா ஜூலை 24 தொடங்கி 61,612 பேர் நாடு திரும்பியுள்ளனர்

ஜூலை 24 தொடங்கி 61,612 பேர் நாடு திரும்பியுள்ளனர்

கோலாலம்பூர்: ஜூலை 24 முதல் மொத்தம் 61,612 பேர் மலேசியா திரும்பியுள்ளதாக தற்காப்பு  அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 65 ஹோட்டல்களிலும், 19 வளாகங்களிலும் 9,312 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். சுமார் 384 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை, 51,916 பேர் வெளியேற்றப்பட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொது சுத்திகரிப்பு நடவடிக்கைகளில், மார்ச் 30 முதல் 137 மண்டலங்களை உள்ளடக்கிய 11,145 நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

2,770 வணிக மையங்கள், 1,631 வீட்டுப் பகுதிகள் மற்றும் 2,689 பொதுப் பகுதிகள் உட்பட மொத்தம் 13,593 வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை (நவம்பர் 5), நாடு முழுவதும் 42 சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு விஷயத்தில், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் நாடு முழுவதும் 686 வளாகங்களில் 12 வகையான பொருட்களை சோதனை செய்துள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அமைச்சகம் 711 எஸ்ஓபி இணக்க சோதனைகளையும் நடத்தியது. 701 வளாகங்கள் எஸ்ஓபிகளை கடைபிடித்தன. மேலும் 10 பேர் அவ்வாறு செய்யவில்லை மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

Previous articleKetua Pertahanan AS sedia surat peletakan jawatan
Next article427 hektar tanah kerajaan diceroboh di Selangor

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version