ஜோகூர் பாரு:
அதிகாலை தீபத்தில் பொந்தியானுக்கு அருகிலுள்ள கம்போங் ஸ்ரீ டுங்குனில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தோரு பேர் துணிகளை மட்டுமே மீட்டு வெளியேறினர்.
சுங்கை பொந்தியான் பெசார் ஆற்றின் அருகே ஐந்து வீடுகளில் தீப்பிடித்ததாக பொந்தியான் தீயணைப்பு மீட்பு நிலையத் தலைவர் பிபிஜிபி அசார் ஜலீல் தெரிவித்தார்.
வீடுகளில் ஒன்றின் சமையலறையிலிருந்து தீ தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
சுமார் இரண்டுமணி நேர் போராட்டத்திர்குப்பின் தீ கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டது. இதில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை. அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகபாப்பாக தப்பிக்க முடிந்தது .
தீ விபத்துக்கான சரியான காரணம், இழப்பு மதிப்பீடுகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று அசார் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் செகோலா கெபாங்சா ஆன் பொந்தியான் பெசாரில் சேர்க்கப்படுள்ளனர்.