Home Uncategorized கொரோனா டிஸ்சார் ஜ் 84 லட்சம்!

கொரோனா டிஸ்சார் ஜ் 84 லட்சம்!

புதுடில்லி:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 84.28 லட்சத்தை கடந்தது.

மேலும் ஒரே நாளில் 45,882 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 90.04 லட்சத்தை கடந்தது.

4.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,32,162 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.60 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.47 ஆகவும் உள்ளது.

மேலும், தற்போது 4.93 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.சோதனைகள்இந்தியாவில் நேற்று (நவ.,19) ஒரே நாளில் 10,83,397 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 12 கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 786 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Dailyhunt

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version