Home சினிமா உள்ளே… வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி

உள்ளே… வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பகல் நிலவு தொடரில் நடித்த அசிம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version