எழுவாய் மனிதா உலகம் மாறினால்
நீயும் எழுவாயே…
மாறா உலகத்தில் நீயும் பிறந்தது அர்த்தமில்லை
என்று நினைத்தால் – மனிதா
இன்றே நீ மாண்டு கொள்வாயே…
மாற்றம் ஒன்றுதான் மாறாதது – அதனைக்
கருதி நீ மாறிடுவாய் மனிதா…
விழிப்புணர்வு ஒன்றினை உருவாக்கிக்கொள் – அதன்பின்
தானாக தன்னம்பிக்கை விதைத்துக்கொள்வாயடா…
உம் விழிப்புணர்வு உன் அடையாளம்…
உம் தன்னம்பிக்கை உன் ஆயுதம்…
முயற்சியே இவை அனைத்திற்கும் வழிகாட்டும் திறவியம்…
இறுதியில் உனக்காகக் காத்திருப்பது வெற்றியே…
நினைவில் கொள் மனிதா…
இன்று விழித்து நாளை எழுவது சோம்பல்தனம்…
இன்று விழித்து இன்றே எழுவது வெற்றியின் அடித்தளம்…
கிஷன் த/பெ ராமதாசன்