Home மலேசியா கோலாலம்பூர், லாவ் யாட் பிளாசா முன் சண்டை- 42 பேர் கைது

கோலாலம்பூர், லாவ் யாட் பிளாசா முன் சண்டை- 42 பேர் கைது

லாவ் யாட் பிளாசா முன் சண்டையிட்டதற்காக 42 பேர் கைது செய்யப்பட்டனர். கணினிகள் மடிக்கணினிகளை விற்கும் கடைகளில் வாடிக்கையாளர்கள் தகராறு செய்ததால் இந்த சண்டை மூண்டது.

வாடிக்கையாளர்கள் மீது கருத்து வேறுபாடு இருப்பதாக நம்பப்படுவது தொடர்பாக இங்குள்ள பு யிட் பிளாசா, புக்கிட் பிந்தாங்கின் லாவ் யாட் பிளாசா முன் சண்டையிட்டதற்காக நாற்பத்திரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ஏசிபி மொஹமட் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

கணினிகள். மடிக்கணினிகளை விற்கும் கடைகளில் வாடிக்கையாளர்கள் மீது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் விசாரணைக்காக டாங் வாங்கி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன ரீதியான சண்டையல்ல என்று ஏசிபி  கூறினார். முன்னதாக சமூக ஊடகங்களில் இச்சண்டை வைரலாகின. 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version