Home இந்தியா அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ரத்த தானம்

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ரத்த தானம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாமில், அக்கட்சியின் நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மருத்துவர் தன்வீர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோணாமேடு, பள்ளிப்பட்டு, நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version