Home மலேசியா வாகன விபத்து – மூன்று குழந்தைகள் பலி

வாகன விபத்து – மூன்று குழந்தைகள் பலி

ஈப்போ: இங்குள்ள வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  272 கிலோ மீட்டரில் லோரி மீது மோதியதில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (டிசம்பர் 16) பிற்பகல் 3 மணியளவில் 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்னர், வடக்கு நோக்கிச் செல்லும் இரண்டு லோரிகள் ஒன்றோடொன்று மோதியதால் இரு வாகனங்களும் அவசரகால பாதையில் நிறுத்தப்பட்டன.

அந்தப் பெண் ஓட்டி வந்த கார் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் ஒன்றில் மோதியது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க நாங்கள் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தினோம். அவர்களின் உடல்களை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போலீசில் ஒப்படைத்தோம் என்று அவர் கூறினார். அந்த பெண்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version