Home மலேசியா யுனெடெட் கிங்டம் விமானங்களுக்குத் தடை

யுனெடெட் கிங்டம் விமானங்களுக்குத் தடை

புத்ராஜெயா: வழக்கத்தை விட அதிகமான தொற்று வீதம் இருப்பதாகக் கூறப்படும் புதிய கோவிட் -19 விகாரம் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யுனைடெட் கிங்டம் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சுகாதார அமைச்சகம் அரசுக்கு அறிவுறுத்தும் என்று  டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மூத்த அதிகாரிகள் (பாதுகாப்பு) சுகாதார அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அடுத்த நடவடிக்கை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்பு ஏற்படும் அபாயங்களை மதிப்பீடு செய்வார்கள் என்றும் கூறினார்.

யுனெடெட் கிங்டம் நிலைமையை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைச்சிலிருந்து ஒரு அறிக்கையைப் பெறும். மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் தேவையான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று அவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தார்.

மார்ச் முதல் மலேசியா தனது எல்லைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு மூடியிருந்தாலும், கோவிட் -19 சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் செப்டம்பர் முதல் யுனெடெட் கிங்டம் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 பற்றிய செய்தி வெளிவந்த பின்னர், இந்தியாவைப் போலவே ஐரோப்பாவிலும் நெதர்லாந்து, இத்தாலி உட்பட பல நாடுகள் பயணிகள் விமானங்களை தடை செய்யத் தொடங்கியுள்ளன.

ஆனால் தற்போதைய தடுப்பூசிகள் அதற்கு எதிராக இன்னும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version