Home உலகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குத் தடை – ஜப்பான்

வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குத் தடை – ஜப்பான்

ஐப்பான்-
 பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

புதிய வகை கொரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.  

இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வகை கொரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு ஜப்பான் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version