Home சினிமா கொரோனா பீதி காரணமாக சூழலை மாற்றிய ‘வலிமை’ படக்குழு

கொரோனா பீதி காரணமாக சூழலை மாற்றிய ‘வலிமை’ படக்குழு

தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகிறார்கள். இறுதி படப்பிடிப்பையும் சில சண்டை காட்சிகளையும் சுவிட்சர்லாந்தில் படமாக்க ஏற்கனவே இயக்குநர் வினோத் தீர்மானித்து இருந்தார்.
அதற்கான பயணத் திட்டத்தையும் அமைத்து கொண்டு இருந்தார்கள். ஆனால் ,தற்போது கொரோனா பரவல் பீதி காரணமாக வலிமை ஷூட்டிங் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு வெளிநாடு போகவிருந்தது. அது மாற்றப்பட்டு, டெல்லி அல்லது ராஜஸ்தானில் அந்தக் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிளம்பியுள்ளது .
மேலும் சுவிட்சர்லாந்தில் எடுக்க வேண்டிய காட்சியை ராஜஸ்தான், புதுடெல்லியில் படப்பிடிப்பை நடத்த திட்டம் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதிலும் அஜித்தின் வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எண்ணப்படுகிறது. தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை திரைக்கு வெளியிட யோசித்து கொண்டு வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version