வருகிற 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம், 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் ஆகிய நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 15-ஆம் தேதி, 26-ஆம் தேதி , மேலும் 28-ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த ‘பார்’கள் மூடப்பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
தங்களுடைய மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள், ‘பார்’கள் இந்த உத்தரவுகளை மீறாத வகையில் தகுந்த அறிவுரைகளைப் பிறப்பிக்க வேண்டும்.
அரசின் உத்தரவு காரணமாக ஒரே மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.