Home சினிமா பொன்னியின் செல்வனில் இணைந்த பிரகாஷ்ராஜ்

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரகாஷ்ராஜ்

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல பிரபலங்கள் நடிக்க ,ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்திருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செட்டில்… மாஸ்டருடன் ஒரு பயணம். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இது. புதிய எல்லைகளை கண்டுபிடிப்பதில் ஆனந்தம் என்று பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version