Home Hot News இவ்வாண்டு தைப்பூச ரதம் இடை நில்லாமல் செல்லும்- 10 பேர் மட்டுமே உடன் செல்ல அனுமதி

இவ்வாண்டு தைப்பூச ரதம் இடை நில்லாமல் செல்லும்- 10 பேர் மட்டுமே உடன் செல்ல அனுமதி

பெட்டாலிங் ஜெயா: ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள ஸ்ரீ மகா மரியம்மன் கோயில் தேவஸ்தானத்தில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி தைப்பூச தேர் வலம்  வர தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) அனுமதி அளித்துள்ளது.

சனிக்கிழமை (ஜன. 23) ஒரு ட்வீட்டில், தைப்பூசத்திற்கு ஒரு நாள் கழித்து ஜனவரி 29 ஆம் தேதி தேர் திரும்புவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் டான் ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர் வழியில் எந்த நிறுத்தங்களையும் செய்ய அனுமதிக்கப்படாது. அதிகபட்சம் 10 பேர் தேர் உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வழியில் எந்த மேள வாத்திய இசை அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

டி.பி.கே.எல் (கோலாலம்பூர் சிட்டி ஹால்) வழக்கம் போல் இணக்கத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.

தேர் தனது வழக்கமான பயணத்தைத் தொடர ஸ்ரீ மகா மரியம்மன் கோயில் தேவஸ்தானம் நிர்வாகம் முன்மொழிந்தது. ஆனால் வழக்கமான ஊர்வலமாக இல்லாமல்  இடைவிடாத பயணமாக அது அமையும்.

Previous articleகாட்டுப் பன்றி மோதி ஆடவர் மரணம்
Next articleராமாயண கதையை சித்தரித்து மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version