திருச்செந்தூர் :
கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் , சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். கடந்த 20 ஆம் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 ரூபாய் கிடைத்திருந்தது.
உண்டியல் 2- ஆவது முறையாக நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில் இருந்து 73 லட்சத்து 35 ஆயிரத்து 935 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 699 ரூபாயும் கிடைத்தது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.