சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 மாத கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது. கொரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு 540 சிறப்பு விமானங்கள் வந்தன. அதில், 2 லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.
10 மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பன்னாட்டு சரக்ககம் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 102 போதை பொருட்களை பறிமுதல் செய்த்தில் 11 பேர் பிடிப்பட்டனர்.
மேலும், தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியதாக 64 வழக்குகளில் ரூ.46 கோடி மதிப்புள்ள 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக 80 பயணிகள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் டாலர், யூரோ, உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களும் பிடிபட்டன.
அதைத்தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த அரியவகை உயிரினங்களான எலி, அணில், ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட வனவிலங்குகள் உரிய அனுமதியின்றி கடத்தி வந்ததாக பிடிபட்டன. தென் இந்தியாவில் கொரோனா காலத்தில் சிறந்த முனையமாக செயல்பட்டதாக சென்னை விமான நிலையம் விளங்கி வருகிறது.
.