இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், நேற்று காலை வரை 35 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இதில் கடைசி 24 மணி நேரத்தில் மட்டுமே 5 லட்சத்து 70 ஆயிரம் போ் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 4,63,793 பேர், ராஜஸ்தானில் 3,24,973 பேர், கர்நாடகாவில் 3,07,891 பேர், மராட்டியத்தில் 2,61,320 பேர் என நேற்று காலை வரை பல மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கை