குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சமூக வலைதளங்களில் இன்று வரை பரப்பப்பட்டு வருகின்றன. வன்முறையில் எடுக்கப்பட்டதாகக் கூறும் புகைப்படங்கள், சிறு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், சிங் ஒருவர் போலீஸ் அதிகாரியை நோக்கி கத்தியை வீசுவதும், மற்றொரு சிங் முகம் முழுக்க காயம் அடைந்த நிலையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த இரு புகைப்படங்களும் குடியரசு தினத்தில் ஏற்பட்ட வன்முறையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.