துபாய் நகரில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரித்துள்ளது என துபாய் சுகாதார ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனையை 83ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்.
இதில் கொரோனா பாதிப்புக்குள்ளான 7 ஆயிரத்து 251 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். மேலும் 13,437 பேர் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றனர்.
தொடர்ந்து இந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெறுபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனையை வழங்குவதற்காக 52 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் இந்த ஆலோசனையை 10 மருத்துவர்கள் மட்டுமே வழங்கினர்.
இந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக 6 மையங்கள் ஆரம்பத்தில் இருந்தன. தற்போது இது 16-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆலோசனை பெறுபவர்கள் சுகாதார ஆணையத்தின் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தற்போது இந்த தொலைபேசி வழியான மருத்துவ ஆலோசனையில் குடும்ப நலம் , கொரோனா குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.