கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரான வெளியுறவுத்துறை அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வர்த்திகா கட்டியார்
இந்த நிலையில் கடந்த வாரம் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் வர்த்திகா கட்டியார் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் ,
எனக்கும் (வர்த்திகா கட்டியார்), இந்திய வெளியுறவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் மராட்டியத்தை சேர்ந்த நித்தீன் சுபாஷ் என்பவருக்கும் கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடந்து இருந்தது.
கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் வசித்து வரும் எனது பாட்டியை ஏமாற்றி காசோலையில் கையெழுத்து வாங்கி ரூ.5 லட்சத்தை எடுத்து நித்தீன் மோசடி செய்து இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது என்னை அடித்து உதைத்தார்.
அவருக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த சுபாஷி, அமோல், சுனிதா, சச்சின், பிரஜக்தா, உறவினர் ஒருவர் ஆகியோர் ஆதரவாக உள்ளனர். அவர்களும் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். அவர்களால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நான் தொல்லை அனுபவித்து வருகிறேன். தற்போது புதிதாக வீடு வாங்க ரூ.35 லட்சம் கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறி இருந்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் நித்தீன் சுபாஷ் உள்பட 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, உயிருக்கு அச்சுறுத்தல், மோசடி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஐ.பி.எஸ். பெண் அதிகாரிக்கு வரதட்சணை கொடுமை கொடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.