மியான்மரில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவில் தலைவர் ஆங் சான் சூகியின் ஆஸ்திரேலிய பொருளாதார ஆலோசகரின் உறவினர்கள், இராணுவ சதித்திட்டத்தை அடுத்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
மெக்வாரி பல்கலைக்கழக பேராசிரியர் சீன் டர்னெல் புதிய இராணுவ ஆட்சிக்குழுவால் கைது செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார். கடந்த வாரம் சூகி, அவரது தேசிய லீக்கின் (என்எல்டி) மூத்த உறுப்பினர்களைத் தடுத்து வைத்த பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை திங்கள்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில், டர்னெல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர் ஒரு நடைமுறை பொருளாதார நிபுணர், அவர் தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் ஒரு நல்ல காரணத்திற்காக எப்போதும் பயன்படுத்துவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மியான்மர் தான் காதலித்த ஒரு நாடு, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதற்காக உழைத்ததன் மூலமும், அங்குள்ள பல வறிய மக்களுக்கு வேலைகள், முதலீடுகள் போன்றவற்றில் நம்பிக்கை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டவர்.
இதே செய்தியை பேஸ்புக்கில் வெளியிட்ட அவரது மனைவி, டர்னலை உடனடியாக விடுவிக்கும்படி கூறினார்.
அவர் அன்பானவர், கனிவானவர், தாராளமானவர், எப்போதும் தனக்கு முன்பாக மற்றவர்களைப் பற்றி எப்பொதுமே சிந்திப்பார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மியான்மர் தூதரை வரவழைத்த பின்னர், டர்னலின் விடுதலைக்கு அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக அழுத்தம் கொடுக்கும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
மியான்மரின் நிலைமை குறித்து நாடு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் பல ஆஸ்திரேலியர்களுக்கு தூதரக உதவிகளை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.