1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 15- ஆம்தேதி டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று கடலில் விழுந்து 102 பேர் பலியானார்கள்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1637 – புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான். 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது. 1920 – யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது. 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய ராச்சியம், ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1946 – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. 1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர். 1970 – டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. 1994 – ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது. 1996 – சீனாவின் இண்டெல்சாட் செயற்கைக்கோள் ஒன்று செலுத்தப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் பலியானார்கள். 1999 – குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய ரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.