அறுவடைக்குச் செல்ல விவசாயிகள் முடிவு
அறுவடை தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் போராட்டத்தில் இருந்தால் போதும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. காசிபுர் விவசாயிகள் போராட்டம் இடம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் காசிபுர், திக்ரி, சிந்து ஆகிய எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26- ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
மத்திய அரசு இதுவரை பிடிக்கொடுக்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு எல்லையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.