Home இந்தியா இந்தியாவிடம் இருந்து 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கும் இலங்கை

இந்தியாவிடம் இருந்து 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கும் இலங்கை

இதில் முன்கள பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களும் தடுப்பூசி பெற்று வருகின்றனர். இந்த பணிகளுக்காக இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை இலங்கை வாங்குகிறது. இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இலங்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தடுப்பூசி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசி தருவதாக உலக சுகாதார அமைப்பு வாக்களித்து இருக்கிறது.
மேலும் சீனாவும், ரஷியாவும் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி தானமாக வழங்க முன்வந்துள்ளன. இதைப்போல இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா மற்றும் ரஷிய ராணுமும் தடுப்பூசி உதவி அளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version