தமிழ் தேசியவாதியான பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி கி. பழநியப்பனார் – பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
பழ.நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராஜர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார்.
இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்டபோது அவரை உயிருடன் மீட்டார். காமராஜர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு ‘மாவீரன்’ என்று பெயர் சூட்டினார்.
தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் டெல்லியில் முடிவு செய்யும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராஜர் காங்கிரஸ் இயக்கத்தை தோற்றுவித்தார்.
பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.