– பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில், மத்திய அரசு அமைப்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தண்ணீருக்குள் தாங்கும் திறன் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், நீரில் மூழ்கிய நிலையில் நீர்மூழ்கி கப்பலின் தாங்கும் திறன் பலமடங்கு அதிகரிப்பது நிரூபணமானது.
இதன்மூலம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.