அந்நாட்டில் முதியவர்கள் மக்கள்தொகை கணிசமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மற்ற கொரோனா வகைகளைவிட இது ஆபத்தானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த வகை உருமாறிய கொரோனா வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளினால் கண்டறியப்பட முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவுகள் வரும்.
ஆனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும். இதனையடுத்து பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் , பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.