Home மலேசியா கோத்த பாருவில் தப்பிச் சென்ற கைதிக்காக manhunt தொடங்கப்பட்டது

கோத்த பாருவில் தப்பிச் சென்ற கைதிக்காக manhunt தொடங்கப்பட்டது

கோத்தபாரு: இங்குள்ள பெங்க்கலன் செபா சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதிக்காக காவல்துறையினர் ஒரு manhunt தொடங்கியுள்ளனர்.

டெலிமா வகாஃப் பாருவில் உள்ள கம்போங் டெலிமாவைச் சேர்ந்த முகமட் சூல்லே முகமட் நூர் என அடையாளம் காணப்பட்ட கைதி சனிக்கிழமை (மார்ச் 27) காலை 10 மணியளவில் சிறைச் சாலையின் சுற்றளவு வேலியில் ஏறி தப்பிச் சென்றதாக கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரஹீம் தாவூத் தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒரு போதைப் பொருள் வழக்கில் தடுப்புக்காவல் கைதியாக கடந்த மார்ச் 22 முதல் பெங்க்கலன் செபா சிறையில் அடைக்கப்பட்டார். சூல்லே அல்லது அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களைக் கொண்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். – பெர்னாமா

Previous articleRUU kualiti benih tanaman akan dibentang di Parlimen
Next articleUndi 18 – இளைஞர்கள் குழு நாடாளுமன்றத்தின் முன் கூடினர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version