Home இந்தியா இந்தியா வந்தடைந்த 3 ரபேல் விமானங்கள்!

இந்தியா வந்தடைந்த 3 ரபேல் விமானங்கள்!

ஒப்பந்தந்தின் படி மேலும் 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளது. 

இந்திய விமானப்படைக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016- இல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.

 

இந்த விமானங்கள் முன்னரே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது. இருப்பினும் தற்போது வரை மூன்று கட்டமாக 11 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

 

இந்நிலையில், பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. அதாவது, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி மேலும் 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளது.

 

இது தவிர, மேலும் 7 ரபேல் விமானங்கள் இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version