Home Hot News நோன்பு காலத்தில் காலை 6 மணி வரை உணவகங்கள் இயங்கலாம்

நோன்பு காலத்தில் காலை 6 மணி வரை உணவகங்கள் இயங்கலாம்

ரமலான் மாத நோன்பு காலத்தில் காலை 6 மணி வரை (sahur) உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் அன்பர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் விடியற்காலை நோன்பு துறப்பதற்கு முன்பு அனைவரும் உணவருந்துவர்.

நோன்பு நோற்பவர்களை கருத்தில் கொண்டு உணவகங்கள் காலை வரை திறந்திருக்கலாம் என்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் (பிரிஸ்மா) சங்கத்தின் தலைவர் டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.

அரசாங்கம் அனுமதி வழங்கினாலும் இந்த கோவிட் தொற்று காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும் வகையில் அனைத்து உணவகங்களிலும் எஸ்ஓபியை கடைபிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

எங்களின் நிலையை புரிந்து கொண்டு இந்த சலுகையை வழங்கி இருக்கும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அவர்களுக்கும் பிரிஸ்மா சார்பில் இவ்வேளையில் நன்றி தெரிவித்து கொள்வதாக டத்தோ அலி மாஜு கூறினார். அனைவரும் பாதுகாப்பான முறையில் நோன்பினை கடைபிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version