(இன்று அன்னையர் தினம் )
முதன்மைக் கடவுள்
உலகம் போற்றும் உன்னத நாளை
உயர்வாய் எண்னுகவ! – அம்மா,
இலகு வார்த்தை சொன்னால் சுகமே
இறையாய் போற்றுகவே!
என்னை உன்னை பெற்றதி னாலே
எழுத்தால் போற்றுகவே- உயர்,
தென்னை தாங்கும் இளநீர் அன்பால்
திருவாய் சாற்றுகவே!
அன்னை என்றால் அகிலம் போற்றும்
அவளுக் கீடில்லை!- தினம்,
மண்ணைத் தொட்டு வணங்கிடல் போலும்
மறந்தும் கேடில்லை!
அன்னையர் தினத்தை இன்றே போலும்
என்றும் போற்ருகவே!- அவள்
உன்னில் உயிரைப் பதித்தவ ளாக
உயிராய் வாழ்த்துகவே!
உன்றன் வாழ்க்கை உயர்வாய் மாற
ஊட்டிப் போற்றுகவே!- அன்பில்,
தென்றல் போல தெளிந்த சொல்லாம்
தமிழால் வாழ்த்துகவே!
தமிழும் அவளும் உலகின் தலைமை
தகவாய் போற்றுகவே!- இனத்தால்,
தமிழன் மாண்புடன் வாழ்ந்தால் போதும்
தாயும் மகிழ்வாளே!ந்
-வீர.கா.அருண்மொழித்தேவன்